தங்கம் வைரம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த சிலை பெருமாள் சிலையா அல்லது முருகன் சிலையா தெரியுமா?
அப்படி என்றால் இந்த ஆதாரங்களை படித்துவிட்டு முடிவெடுங்கள்.
எந்தவொரு ஆழ்வாரும் திருப்பதியின் பெருமை பற்றி பாடியதில்லை. அருணகிரிநாதர் திருப்பதியில் இருப்பது முருகன் என்பதை அறிந்து வேந்த குமரா குகசேந்தமயூர வடவேங்கட மாமலையில் உறையோனே என்று பாடியுள்ளார்
வெங்கடேஸ்வரபெருமான் என்று வைணவப்பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்தது
வேலை உடைய ஈஸ்வரன் என்பதே வெங்கடேஸ்வரன் என்று பொருள் தரும்
குன்று மலை இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே தெய்வம். அப்படி இருக்க திருப்பதி மலைமீது இருக்கும் சாமி முருகனாக இருப்பதில் ஆச்சர்யம் தேவையில்லை தானே.
திருவேங்கடம் = திரு + வேல் + இடம்
திருவேலிடம் என்ற சொல்லே காலப்போக்கில் திருவேங்கடமாக மருவியிருக்கும்
கோயில் அமைப்பு ஆகம முறைப்படி ஒரு முருகன் கோயில் எப்படி கட்டியிருக்கவேண்டுமோ அப்படித்தான் கட்டியுள்ளனர். விஷ்ணு கோயிலைப் போல் அல்ல.
பெரும்பாலான வைணவக் கோயில்களில் இருக்கும் கருடாழ்வார் இவ்வளவு புகழ் வாய்ந்த திருப்பதி கோயிலில் ஏன் இல்லை.
கோயில் சுவர் முழுக்க சுண்ணாம்பால் மறைக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களை நீங்கள் பார்க்கமுடியும். அதற்கான காரணம் தெரியுமா?
ஏழுமலையானின் கரங்களை பாருங்கள். அப்படியே முருகன் சிலையில் இருக்கும் கரங்களின் வடிவத்தையே பெற்றுள்ளது.
கிருபானந்த வாரியார் கூட இதுகுறித்து தனது கந்தபுராண சொற்பொழிவுகளில் அடிக்கடி தன் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.